சில நேரங்களில் எதற்கெனத்தெரியாது அழத்தோணும்!
ஓவ்வொரு மழை இரவிலும்
உன் நினைவுகள் - இடியிடிக்கும்
என் மனக்காட்டில்...
கணக்கு வழக்கு இல்லாமல்,
பால பாலமாய் வெடித்திருக்கும்
மனக்குளத்தில் - மண்வாசனையைக்
கிளப்பிச்செல்லும்...
மனசு நிரம்பி
கண்களில் வழியும்,
காதலும் - மழை நீரும்...
கடைசியாய் நீ கொடுத்துப்போன
முத்தத்தின் கதகதப்பு போதும்
காலன் வரும்வரைக்கும்...
காலப் பயணமென்பது
காதலுக்கு(தோற்ற) மட்டுமே உரித்தானது!
Comments
Post a Comment