Posts

சில நேரங்களில் எதற்கெனத்தெரியாது அழத்தோணும்!

ஓவ்வொரு மழை இரவிலும்  உன் நினைவுகள் - இடியிடிக்கும் என் மனக்காட்டில்... கணக்கு வழக்கு இல்லாமல், பால பாலமாய் வெடித்திருக்கும்  மனக்குளத்தில் - மண்வாசனையைக் கிளப்பிச்செல்லும்... மனசு நிரம்பி  கண்களில் வழியும்,  காதலும் - மழை நீரும்... கடைசியாய் நீ கொடுத்துப்போன முத்தத்தின் கதகதப்பு போதும்  காலன் வரும்வரைக்கும்... காலப் பயணமென்பது  காதலுக்கு(தோற்ற)  மட்டுமே உரித்தானது!